கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் அறிமுகமாகும் மகேஷ் பாபு பட ரிசல்ட்டை கோடம்பாக்கமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்களே வருகின்றன.
சென்னை ரோகிணி போன்ற சில திரையரங்கில் விடியற்காலை ஷோ ஸ்பைடர் போடப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை. காலை 11 மணி காட்சிக்கும் அந்த அளவு திரையரங்கில் கூட்டம் இல்லை. படம் பார்த்த சிலர் வெளியிட்டுள்ள விமர்சனம் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி கத்தி போன்ற அளவு வலுவான கதை ஸ்பைடரில் இல்லை. சாதாரண மசாலா கதை என்கின்றனர்.
படம் வார நாட்களில் வெளியாகி இருப்பதும் படத்திற்கு கூட்டம் இல்லாமல் போனதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் படத்திற்கு கூட்டம் வரும் என எதிர்பார்க்கின்றனர்.