'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், பிந்து மாதவி, ஹரீஷ் ஆகியோர் மட்டுமே உள்ளனர். இந்த 5 பேரில் ஒருவர் தான் பிக் பாஸாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இதில் பிந்து மாதவியும், ஹரீசும் இடையில் வீட்டுக்குள் சென்றவர்கள். பிக் பாஸ் தொடங்கப்பட்ட நாளிலிருந்து அங்கு இருக்கிறவர்கள் சினேகன், கணேஷ் வெங்கட் ராம், ஆரவ் ஆகியோர். எனவே இந்த மூன்று பேரில் ஒருவரே பிக் பாஸாக தேர்ந்தெடுக்கபடுவார்கள் என தெரிகிறது.
கணேஷ் வெங்கட்ராம் பலமுறை வெளியேறும் வாய்ப்புகள் அதிகம் இருந்தது. சினேகன் மீது பெண் பங்கேற்பாளர்கள் பல குறைகளை சொல்லியிருக்கிறார்கள். ஆரவுக்கு ஓவியா விஷயத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. இந்த நிலையில் சினேகன், அல்லது ஆரவ் இருவரில் ஒருவர் தான் பிக்பாஸ் வெற்றியாளர் என்று கணிக்கப்படுகிறது.
வருகிற ஞாயிற்றுக்கிழமையில் இந்த 5 பேரில் ஒருவர் வெளியேற்றப்பட இருக்கிறார். மீதமுள்ள 4 பேரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். கடைசி மூன்று நாட்களுக்கு ஒரு பெரிய செலிபிரிட்டியை வீட்டுக்குள் அனுப்ப இருக்கிறார்கள். அவர் யார் என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள்.