'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை த்ரிஷாவின் முன்னாள் காதலர் வருண் மணியன். இவர் ரேடியன்ஸ் என்று நிறுவனத்தை நடத்தி வருகிறார். காவியத் தலைவன், வாயை மூடி பேசவும் உள்பட சில படங்களையும் தயாரித்துள்ளார். வருண் மணியனும், நடிகை த்ரிஷாவும் தீவிரமாக காதலித்தனர். திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமணம் நின்றுவிட்டது.
வருண் மணியனுக்கு கடந்த சில மாதங்களாகவே கொலை மிரட்டல் வந்தது. இதையொட்டி அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வருண் மணியன் நேற்று தனது நந்தனம் அலுவலகத்தில் பணிகளை முடித்து விட்டு லிப்டில் கீழே இறங்கி உள்ளார். அவருடன் அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்களும் இறங்கி உள்ளனர்.
திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் லிப்டின் உள்ளேயே வருண் மணியனை கடுமையாக தாக்கி உள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத வருண் மணியன் உதவிக்கு அழைத்துள்ளார். அவரது சத்தம் கேட்டு வந்த பணியாளர்கள் தாக்கிய இருவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பிடிபட்ட இருவரும் சைதாப்பேட்டையைச் சேர்ந்த முத்துகுமார், பாலமுருகன் என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.