அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
அமிதாப் பச்சனின் வாரிசான நடிகர் அபிஷேக் பச்சன், ஜேபி தத்தா இயக்கத்தில் பால்தன் என்ற படத்தில் நடிக்க இருந்தார். இவருடன் அர்ஜூன் ராம்பால், புல்கிட் சாம்ராட், சுனில் ஷெட்டி, சோனு சூட், ஜிம்மி ஷெர்கில், சித்தாந்த் கபூர், ஜாக்கி ஷெரப் என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் ஓரிரு நாளில் லடாக் பகுதியில் ஆரம்பிக்க இருக்க நிலையில், திடீரென அபிஷேக் பச்சன் இப்படத்திலிருந்து விலகி உள்ளார்.
இதுகுறித்து தத்தா கூறுகையில், பால்தன் படத்தில் அபிஷேக் பச்சன் நடிக்கவில்லை. படப்பிடிப்பு தொடங்க 24 மணிநேரம் இருந்த நிலையில் அவரின் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. நாங்கள் ஏற்கனவே லடாக்கில் முகாமிட்டு மற்ற நட்சத்திரங்களை வைத்து படமாக்க உள்ளோம். அபிஷேக்கின் வருங்கால படங்களுக்கு வாழ்த்துக்கள். விரைவில் அபிஷேக்கிற்கு பதிலாக வேறு ஒரு நடிகரை தேர்வு செய்து அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.