கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
ஆங்கிலம் பேச தெரியாததால் நடிகைகளிடம் பேச முடியாமல் தான் வேதனைப்பட்டதாக சொல்கிறார் டைரக்டர் அமீர்.
புதுமுகங்கள் கார்த்திக் - மோனா நடித்துள்ள படம் பாடம். ராஜசேகர் என்ற புதியவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார். பி.எஸ்.ஜிபின் தயாரித்துள்ளார். அரசு பள்ளியில் தமிழ் மீடியம் பயிலும் மாணவன் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் இசை விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. சீமான், டைரக்டர் அமீர், கவிஞர் பிறைசூடன், சீனுராமசாமி, பாலாஜிமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது டைரக்டர் அமீர் பேசும்போது, எனக்கு படிக்கிற காலத்தில் ஆங்கிலம் என்றால் சுத்தமாக வராது. பிளஸ்-2 படித்தபோது ஆங்கிலத்தில் பெயிலாகி விட்டேன். மேலும், சினிமாவுக்கு வந்த பிறகு ஆங்கிலம் தெரியாததால் என் படத்தில் நடிக்கும் நடிகைகளிடம் பேச கூட முடியாமல் சங்கடப்பட்டிருக்கிறேன். குறிப்பாக, ராம் படத்தை இயக்கியபோது அதில் நாயகியாக நடித்த கஜாலாவுடன் என்னால் பேச முடியாமல் எனது உதவியாளரான சசிகுமாரிடம் சொல்லி சொல்லித்தான் அவரிடம் பேசினேன்.
ஒரு படத்தை தயாரித்து இயக்குகிறோம், ஆனால் ஒரு நடிகையிடம் நம்மால் பேசகூட முடியவில்லையே என்று அப்போது மனதளவில் வேதனைப்பட்டிருக்கிறேன். அதேபோல் அந்த சமயத்தில் முன்னணியில் இருந்த ஒரு நடிகை ஒருநாள் என்னிடம் போனில் பேசினார். ஆனால், அவர் ஆங்கிலத்திலேயே பேசியதால் அவரிடம் தொடர்ந்து பேச முடியாமல் ஏதோ ஓரிரு வார்த்தைகள் பேசி சமாளித்து கட் பண்ணி விட்டேன்.
ஆனால் அந்த நடிகை நான் பந்தா செய்வதாக நினைத்துக்கொண்டு பின்னர், ஒரு விழாவில் என்னைப்பற்றி தனுசிடம் சொல்லியிருக்கிறார். அப்போது தனுஷ் என்னிடம் வந்து கேட்க, எனக்கு ஆங்கிலம் தெரியாத விசயத்தை அவரிடம் சொன்னேன். அதன்பிறகு அந்த நடிகையிடம் விவரத்தை சொல்லி புரிய வைத்தார்.
இதே பிரச்சினை பருத்தி வீரன் படத்திற்கு சர்வதேச அளவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தபோது அந்த விழாவுக்கு செல்லும்போதும் நடந்தது. ஆங்கிலம் பேச முடியாது என்பதால் அந்த விழாவுக்கே செல்ல நான் தயங்கினேன். ஆனால் அப்போது என்னுடன் நடிகர் கார்த்தி வருவதாக சொன்னதால் தான் அந்த விழாவுக்கு சென்றேன். அவர் தான் எல்லா இடங்களிலும் ஆங்கிலத்தில் பேசி என்னை அழைத்து சென்றார். மேலும், அங்கு போன இடத்திலும் ஆங்கிலம் தெரியாமல் தயங்கி நின்றேன்.
இப்படி பலமுறை ஆங்கிலம் தெரியாமல் பட்ட அவஸ்தையினால் தான் அதன்பிறகு எனது படங்களில் இனிமேல் தமிழ் தெரிந்த நடிகைதான் என்ற முடிவெடுத்து பருத்திவீரனில் பிரியாமணியை நடிக்க வைத்தேன். தொடர்ந்து எனது படங்களில் தமிழ் தெரிந்த நடிகைகள் மட்டும் இடம்பெற்று வருகின்றனர் என்றார் அமீர்.