ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படம் குறித்து புதிய தகவல் இதோ! |
கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே டுவிட்டரிலும், பொது வெளிகளிலும் அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார். இதனால் அவர் அரசியலுக்கு வர இருக்கிறார் என்று கூறப்பட்டது. இது தற்போது உறுதியாகி உள்ளது. நேற்று அவர் அளித்த பேட்டியில் இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:
அரசியலில் இறங்கவும், தனிக்கட்சி தொடங்குவதிலும் உறுதியாக இருக்கிறேன். அரசியல் கல்விக்காகத்தான் பினராய் விஜயன், கெஜ்ரிவால் போன்றவர்களை சந்திக்கிறேன். கட்சியின் பெயர், கொடி, சின்னம் தேர்வு செய்யும் பணியை தொடங்கி விட்டேன். அது உடனே முடியும் என்ற எதிர்பார்ப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
கட்சி தொடங்குதவற்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறேன். அது முடிந்த பிறகுதான் எதையும் சொல்ல முடியாது. சமைத்து முடிப்பதற்கு முன் பரிமாற முடியாது. அரசியலில் நான் முழுமையாக ஈடுபடும்போது சினிமாவில் நடிப்பது சரியாக இருக்காது. இரண்டு படகுகளில் கால்வைத்துக் கொண்டு பயணிக்க முடியாது.
அரசியலுக்கு வரும்போது எதிர்ப்பு இருப்பது இயற்கைதான். எதிர்ப்பு இல்லாமல் எதுவும் இல்லை. எது செய்தாலும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும், ஊருக்கு எது நல்லதோ அதை செய்கிறேன். மக்களுக்கு விரோதமான கட்சிகளுக்கு மாற்றாக எனது அரசியல் இருக்கும். ஆட்சிக்கு வரமுடியாத பல நல்ல கட்சிகள் இருக்கிறது. அந்த கட்சிகளின் கருத்துக்களையும், கொள்கைகளையும் எடுத்துக் கொள்வேன்.
தற்போது விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு படங்கள் கையில் இருக்கிறது. என்னை நம்பி பணம் போட்டவர்களை கைவிட முடியாது. அதனால் அந்த படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு பொது வாழ்வுக்கு வருவேன் என்கிறார் கமல்.