பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே டுவிட்டரிலும், பொது வெளிகளிலும் அரசியல் கருத்துக்களை பேசி வருகிறார். இதனால் அவர் அரசியலுக்கு வர இருக்கிறார் என்று கூறப்பட்டது. இது தற்போது உறுதியாகி உள்ளது. நேற்று அவர் அளித்த பேட்டியில் இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:
அரசியலில் இறங்கவும், தனிக்கட்சி தொடங்குவதிலும் உறுதியாக இருக்கிறேன். அரசியல் கல்விக்காகத்தான் பினராய் விஜயன், கெஜ்ரிவால் போன்றவர்களை சந்திக்கிறேன். கட்சியின் பெயர், கொடி, சின்னம் தேர்வு செய்யும் பணியை தொடங்கி விட்டேன். அது உடனே முடியும் என்ற எதிர்பார்ப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
கட்சி தொடங்குதவற்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறேன். அது முடிந்த பிறகுதான் எதையும் சொல்ல முடியாது. சமைத்து முடிப்பதற்கு முன் பரிமாற முடியாது. அரசியலில் நான் முழுமையாக ஈடுபடும்போது சினிமாவில் நடிப்பது சரியாக இருக்காது. இரண்டு படகுகளில் கால்வைத்துக் கொண்டு பயணிக்க முடியாது.
அரசியலுக்கு வரும்போது எதிர்ப்பு இருப்பது இயற்கைதான். எதிர்ப்பு இல்லாமல் எதுவும் இல்லை. எது செய்தாலும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும், ஊருக்கு எது நல்லதோ அதை செய்கிறேன். மக்களுக்கு விரோதமான கட்சிகளுக்கு மாற்றாக எனது அரசியல் இருக்கும். ஆட்சிக்கு வரமுடியாத பல நல்ல கட்சிகள் இருக்கிறது. அந்த கட்சிகளின் கருத்துக்களையும், கொள்கைகளையும் எடுத்துக் கொள்வேன்.
தற்போது விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு படங்கள் கையில் இருக்கிறது. என்னை நம்பி பணம் போட்டவர்களை கைவிட முடியாது. அதனால் அந்த படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு பொது வாழ்வுக்கு வருவேன் என்கிறார் கமல்.