ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் |
நடிகை காவ்யா மாதவனை கைது செய்யும் திட்டம் இல்லை என, போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது முன்ஜாமின் மனு முடித்து வைக்கப்பட்டது.
முன்னணி நடிகை மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது இரண்டாவது மனைவி, காவ்யா மாதவனிடம், போலீசார் பலமுறை விசாரணை நடத்தினர்; அவரது நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது.
நடிகை மானபங்க வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பல்சர் சுனில், விசாரணையின் போதும், பல முறை மேடம் என, கூறியது, காவ்யா மாதவனை குறிப்பதாக கருதப்பட்டது. இதனால், காவ்யாமாதவன் கைது செய்யப்படக்கூடும் என, கருதப்பட்டது.
இதனால், முன்ஜாமின் கோரி, கொச்சி உயர் நீதிமன்றத்தில், நடிகை காவ்யா மாதவன் மனு தாக்கல் செய்தார். அதில் திலீப் மனைவி என்பதற்காக, தனக்கு எதிராக சதிவலை பின்னப்படுவதாகவும், போலீஸ், சினிமா, மீடியா துறையினர் இணைந்து, இந்த சதியில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், காவ்யா மாதவனை கைது செய்யும் திட்டம் இல்லை என்றும், இவ்வழக்கில் அவர், எதிரியாக சேர்க்கப்படவில்லை என்றும் போலீஸ், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், காவ்யா மாதவனின் முன்ஜாமின் மனுவை முடித்து வைத்து, உத்தரவிட்டனர். எனினும், திலீப்பின் நெருங்கிய நண்பர், நாதர்ஷாவின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை, அக்., 4ம் தேதிக்கு, ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.