ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை காவ்யா மாதவனை கைது செய்யும் திட்டம் இல்லை என, போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது முன்ஜாமின் மனு முடித்து வைக்கப்பட்டது.
முன்னணி நடிகை மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது இரண்டாவது மனைவி, காவ்யா மாதவனிடம், போலீசார் பலமுறை விசாரணை நடத்தினர்; அவரது நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது.
நடிகை மானபங்க வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பல்சர் சுனில், விசாரணையின் போதும், பல முறை மேடம் என, கூறியது, காவ்யா மாதவனை குறிப்பதாக கருதப்பட்டது. இதனால், காவ்யாமாதவன் கைது செய்யப்படக்கூடும் என, கருதப்பட்டது.
இதனால், முன்ஜாமின் கோரி, கொச்சி உயர் நீதிமன்றத்தில், நடிகை காவ்யா மாதவன் மனு தாக்கல் செய்தார். அதில் திலீப் மனைவி என்பதற்காக, தனக்கு எதிராக சதிவலை பின்னப்படுவதாகவும், போலீஸ், சினிமா, மீடியா துறையினர் இணைந்து, இந்த சதியில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், காவ்யா மாதவனை கைது செய்யும் திட்டம் இல்லை என்றும், இவ்வழக்கில் அவர், எதிரியாக சேர்க்கப்படவில்லை என்றும் போலீஸ், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், காவ்யா மாதவனின் முன்ஜாமின் மனுவை முடித்து வைத்து, உத்தரவிட்டனர். எனினும், திலீப்பின் நெருங்கிய நண்பர், நாதர்ஷாவின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை, அக்., 4ம் தேதிக்கு, ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.