ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
ஆன்மிக கோட்பாடு உள்ளிட்ட சில விஷயங்கள் ஒத்துப்போவதால் பா.ஜ., உடன் கூட்டணி வைக்க ரஜினி ஏற்றவர் என நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. தமிழக மக்களுக்காக முதல்வராவேன், 100 நாளில் தேர்தல் வந்தால் கட்சி ஆரம்பிப்பேன் என்றெல்லாம் சொன்னவர், தற்போது தனியார் டிவி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், அரசியல் பற்றி மேலும் சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
யாருடனும் கூட்டணி இல்லை
நிறைய கட்சிகளுடன் அரசியல் குறித்து அறிவுரை கேட்டு வருகிறேன். அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்ததால் அவருடன் கூட்டணி என்று அர்த்தமில்லை. நான் அவரை சென்று சந்திக்கவில்லை, அவர் தான் என்னை வந்து சந்தித்தார். நேரம் குறிப்பிட்டு நான் கட்சி தொடங்க மாட்டேன். ஆனால் நிச்சயம் அரசியல் கட்சி தொடங்குவேன்.
ஊழல் தான் எனது போர்
திராவிட கட்சிகளுக்கு எதிராக தான் எனது கட்சி இருக்கும். திமுக., மற்றும் அதிமுக., கட்சிகளின் ஊழல்களை பார்த்தவர்கள் தமிழக மக்கள். எனது போராட்டம் ஊழலுக்கு எதிராகத் தான் இருக்கும்.
பா.ஜ., கூட்டணிக்கு ரஜினி ஏற்றவர்
நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள், அரசியலுக்கு நான் வருவது குறித்து அவரிடம் தெரிவித்து விட்டேன். ஆன்மிகத்தில் ரஜினி நம்பிக்கை உடையவர், பா.ஜ., உடனான கூட்டணிக்கு அவர் ஏற்றவர். நான் பகுத்தறிவாதி. நான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன், கம்யூனிஸவாதியும் கிடையாது. எந்த கட்சியுடனும் நான் கூட்டணி சேர மாட்டேன்.
எனக்கு, என் நாடு மிகவும் பிடிக்கும். என் வீட்டில் இருந்தும், மாநிலத்தில் இருந்தும் தான் என் நாடு தொடங்கும். வட இந்தியாவிற்கும், தென் இந்தியாவிற்கும் இடைவெளி உள்ளது. தமிழகம் பற்றி டில்லிக்கு தெரியாது, டில்லி பற்றி தமிழகத்திற்கு தெரியாது. அதனால் தான் தேசிய கட்சிகளால் இங்கு ஜெயிக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அருவருக்கத்தக்கது
மற்றொரு பேட்டியில், நானும், ரஜினியும் நல்ல நண்பர்கள். ரஜினி ஒரு பாதையில் செல்பவர், நான் வேறு பாதையில் செல்பவன், என்னையும், அவரையும் ஒப்பிட்டு பேசுவது அருவருக்கத்தக்கது. நான் அரசியலில் களம் இறங்க போகிறேன் என்று அவரிடம் தெரிவித்துவிட்டேன்.
என்னுடைய கட்சியில் இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும், திறமையானவர்களுக்கும் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும். நான் ஆரம்பிக்கும் கட்சிக்கு, ஆம் ஆத்மி கட்சி போல் மக்களிடமிருந்து நிதி திரட்டப்படும் என்றார்.