'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
கதாசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மலையாள திரையுலகில் இரட்டை காதசிரியர்கள் கோலோச்சுவதும், பின் தங்களது தனித்திறமையை பரிசோதிக்க கூட்டணியில் இருந்து பிரிவதும் வாடிக்கை தான்.
பிரபல இரட்டை கதாசிரியர்களான சாச்சி-சேது இருவரும் அப்படி ஒரு ஹிட் காம்பினேஷன் கதாசிரியர்களாக வலம் வந்தவர்கள் தான். இயக்குனராகும் ஆசை சாச்சிக்கு எழவே, கூட்டணியில் இருந்து பிரிந்தார். தானே தனியாக கதை எழுதி, பிருத்விராஜை வைத்து 'அனார்கலி' என்கிற படத்தை இயக்கி நூறு நாட்கள் ஓடும் வெற்றிப் படமாக்கினார். அதேசமயம் மற்றவர்களின் படங்களுக்கும் கதை எழுதி வருகிறார்.
அப்படி அவர் திலீப்புக்காக எழுதிய கதை தான் வரும் செப்-28ல் பல தடைகளை தாண்டி வெளியாக இருக்கும் 'ராம்லீலா'. அரசியல் பின்னணியில் இவர் எழுதிய கதையில் இடம்பெற்ற பல நிகழ்வுகள் தற்போது திலீப்பின் நிஜ வாழ்க்கையிலேயே நடப்பது தனிக்கதை.
இது ஒருபக்கம் இருக்க, சாச்சி கதை எழுதி கமர்ஷியல் இயக்குனர் ரபி இயக்கத்தில் பிஜூமேனன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஷெர்லக் டோம்ஸ்' படமும் அதே தேதியில் தான் வெளியாகிறது. “திலீப் படம் எப்போதோ ரிலீஸாகி இருக்க வேண்டியது, ஆனால் இப்படியா இரண்டு படங்களும் ஒன்றாக ரிலீஸாகி தனக்கு அக்னி பரீட்சை வைக்கவேண்டும்” என ஒரு பக்கம் சாச்சிக்கு பிபி ஏறினாலும், இரண்டு படங்களுமே வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையும் அவருக்கு இருக்கிறதாம்.