பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
கதாசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மலையாள திரையுலகில் இரட்டை காதசிரியர்கள் கோலோச்சுவதும், பின் தங்களது தனித்திறமையை பரிசோதிக்க கூட்டணியில் இருந்து பிரிவதும் வாடிக்கை தான்.
பிரபல இரட்டை கதாசிரியர்களான சாச்சி-சேது இருவரும் அப்படி ஒரு ஹிட் காம்பினேஷன் கதாசிரியர்களாக வலம் வந்தவர்கள் தான். இயக்குனராகும் ஆசை சாச்சிக்கு எழவே, கூட்டணியில் இருந்து பிரிந்தார். தானே தனியாக கதை எழுதி, பிருத்விராஜை வைத்து 'அனார்கலி' என்கிற படத்தை இயக்கி நூறு நாட்கள் ஓடும் வெற்றிப் படமாக்கினார். அதேசமயம் மற்றவர்களின் படங்களுக்கும் கதை எழுதி வருகிறார்.
அப்படி அவர் திலீப்புக்காக எழுதிய கதை தான் வரும் செப்-28ல் பல தடைகளை தாண்டி வெளியாக இருக்கும் 'ராம்லீலா'. அரசியல் பின்னணியில் இவர் எழுதிய கதையில் இடம்பெற்ற பல நிகழ்வுகள் தற்போது திலீப்பின் நிஜ வாழ்க்கையிலேயே நடப்பது தனிக்கதை.
இது ஒருபக்கம் இருக்க, சாச்சி கதை எழுதி கமர்ஷியல் இயக்குனர் ரபி இயக்கத்தில் பிஜூமேனன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஷெர்லக் டோம்ஸ்' படமும் அதே தேதியில் தான் வெளியாகிறது. “திலீப் படம் எப்போதோ ரிலீஸாகி இருக்க வேண்டியது, ஆனால் இப்படியா இரண்டு படங்களும் ஒன்றாக ரிலீஸாகி தனக்கு அக்னி பரீட்சை வைக்கவேண்டும்” என ஒரு பக்கம் சாச்சிக்கு பிபி ஏறினாலும், இரண்டு படங்களுமே வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையும் அவருக்கு இருக்கிறதாம்.