‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ள படம் ஸ்பைடர். வருகிற 27-ந்தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது. சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மகேஷ் பாபுவுடன் காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, பரத் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது ஏ.ஆர்.முருகதாஸ் பேசும்போது, மகேஷ்பாபுவை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை. ஆனால், நான் தமிழ், ஹிந்தி என பிசியாக இருந்ததால் அது சாத்தியப்படாமல் இருந்து வந்தது.
மேலும், மகேஷ் பாபுவைப் பொறுத்தவரை எந்த கதையாக இருந்தாலும் அதற்குள் பிட்டாகிக் கொள்வார். கடினமாக உழைப்பார். அதோடு, எனக்கும் தெலுங்கில் படம் கொடுத்து நாளாகி விட்டது என்பதால், ஒரு படம் தேவைப்பட்டது.
ஸ்பைடர் கதையை அவரிடம் சொன்னபோது, உடனே ஓகே சொன்னார். அதோடு, தமிழுக்கும் அவரை அறிமுகம் செய்யலாம் என்று முடிவு செய்தேன். அவருக்கு தமிழ், தெலுங்கு இரண்டு மொழியுமே தெரியும் என்பது எளிதாக இருந்தது. இந்த படத்தின் நாயகி ரகுல்பிரீத் சிங்கிற்கு தான், தமிழ், தெலுங்கு இரண்டு மொழியுமே தெரியாது. இருப்பினும் உதவி இயக்குனர்களிடம் டயலாக்கை நன்றாக கற்றுக் கொண்டு உற்சாகமாக நடித்தார். அவருக்கு இந்த படம் ரொம்ப நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும். இந்த படத்தின் வில்லன் கேரக்டரை உருவாக்கியபோது எஸ்.ஜே.சூர்யாவை முடிவு செய்து விட்டேன். இந்த படம் அவரை பெரிய இடத்துக்கு கொண்டு செல்லும் என்றார்.
மகேஷ்பாபு பேசுகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வேண்டுமென்ற ஆசை எனக்கும் இருந்து கொண்டேயிருந்தது. அதனால் ஸ்பைடர் கதையை அவர் சொன்னதும் ரொம்ப சந்தோசத்துடன் ஒத்துக் கொண்டேன். அதேபோல், ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவனுடன் வேலை பார்க்க வேண்டுமென்ற ஆசையும் இருந்தது. அவரிடத்தில் முன்பு ஒருமுறை நான் சொன்னபோது, தெலுங்கு டைரக்டர்கள் நமக்கு செட்டாகாது என்று கூறி விட்டார். ஆனால், இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் படம் என்பதால் ஒத்துக் கொண்டுள்ளார். எப்படியோ சந்தோஷ்சிவன் சார் ஒளிப்பதிவு செய்யும் படத்தில் நான் நடித்து விட்டேன். இந்த ஸ்பைடர் படம் தமிழ் ரசிகர்கள் மனதில் எனக்கு இடம் பிடித்துக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
இதையடுத்து நிருபர்கள், இந்த சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் அதேமாதிரி விஜய்-மகேஷ்பாபுவை இணைத்து ஒரு படமெடுப்பீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு மகேஷ்பாபு எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்-மகேஷ்பாபு ஒத்துக்கொண்டால், அவர்களை இணைத்து படமெடுக்க நான் ரெடியாக இருக்கிறேன் என்றார்.