விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற நடிகை சுஜா வருணி வெளியேற்றப்பட்டார். வெளியேறிய அவருடன் கமல் கலந்துரையாடினார். அப்போது பல இடங்களில் அவர் கண் கலங்கினார். குறிப்பாக அவர் தந்தையை பற்றி பேசும்போது கண்ணீர் விட்டு அழுதார்.
"எனக்கு அப்பா இருக்கிறார், ஆனால் இல்லை. நான் பெண்ணாக பிறந்த விட்டேன் என்பதால் என்னை தூக்கி எறிந்துவிட்டுச் சென்று விட்டார். எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஒருவேளை இந்த நிகழ்ச்சியை பார்த்து அவர் என்னைத் தேடி என் வீட்டுக்கு வந்தால் ஒரு நாள் முழுக்க அவருக்கு மகளாக இருந்து அவருக்கு சாப்பாடு போட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்று சொல்லி கண் கலங்கினார்.
அதற்கு கமல் "ஒரு மாசத்துக்குள்ள உங்கள் அப்பா வராவிட்டால் நான் வருகிறேன் உன் வீட்டுக்கு சாப்பிட" என்றார். கமல் இவ்வாறு சொன்னதும் சுஜா மேலும் கண் கலங்கினார். பின்னர் விடை பெற்றுச் செல்லும் முன் "என்னோட அப்பா வராவிட்டால் நீங்கள் வருவதாக சொல்லியிருக்கிறீர்கள். என் திருமணத்தை நீங்கள் தான் அப்பா ஸ்தானத்தில் இருந்து நடத்தி தர வேண்டும்" என்றார். "கண்டிப்பாக..." என்றார் கமல். அதைத் தொடர்ந்து அனைவரிடமும் விடைபெற்று கண்ணீருடன் வெளியேறினார் சுஜா.