அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
நடிகர் ஜெய்யும், பிரேம்ஜியும் கடந்த சில தினங்களுக்கு முன்பு போதையில் கார் ஓட்டி அடையாறு பாலத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர். இது தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இரண்டு முறை போதையில் வாகம் ஓட்டியதாக ஜெய் பிடிபட்டதால் அவரது ஓட்டுனர் உரிமம் ரத்தாகிறது. இதனால் நடந்த விபத்து குறித்து விளக்கம் அளிக்கும்படியும், ஒரிஜினல் ஓட்டுனர் உரிமத்தை ஒப்படைக்கும்படியும் போக்குவரத்து அதிகாரிகள் ஜெய்க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று இரவு நடந்த பார்ட்டியில் எடுத்துக் கொண்ட செல்பியை பிரேம்ஜி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் "புதன் கிழமை பீவர் & கோவா 2" என்று குறிபிட்டு மது கோப்பை சிம்பல்களையும் வெளியிட்டுள்ளனர். அந்த படத்தில் நடிகர் வைபவும் உடன் இருக்கிறார். போதையில் கார் ஒட்டி போலீஸ் மாட்டிக்கொண்ட பிறகும் அதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் படத்தை வெளியிட்டிருப்பது கோடம்பாக்க வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.