பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சர்ச்சைகளுக்கு பேர் போன ராக்கி ஷவந்த், தற்போது பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் ராம் ரஹீமின் வாழ்க்கையை படமாக எடுக்க போகிறாராம். இப்படத்தை தானே தயாரித்து, நடிக்கவும் போகிறாராம்.
ராக்கி ஷவந்த் மற்றும் அவரது சகோதரர் ராகேஷ் ஷவந்த் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு, அப் ஹோகா இன்ஷாப் என பெயரிடப்பட்டுள்ளதாம். ஆனால் இது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள தலைப்பு எனவும், பிறகு வேறு பெயர் மாற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தில் ராம் ரஹிம் சிங் வேடத்தில் நடிகர் ராசா முரத் நடிக்க உள்ளாராம். சாமியார் ராம் ரஹிமின் மகளான ஹனிப்ரீத் கதாபாத்திரத்தில் தான் ராக்கி ஷவந்த் நடிக்கிறாராம்.
இதனை தானே உறுதி செய்த ராக்கி ஷவந்த், ஆம். இப்படத்தில் ஹனிப்ரீத் வேடத்தில் நான் நடிக்கிறேன். எனக்கு அவரை கடந்த 7 - 8 வருடங்களாக நன்றாக தெரியும். தற்போது இப்படத்தின் மூலம் ஹரிப்ரீத் மற்றும் ராம் ரஹிம் உடனான எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள போகிறேன் என்றார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புக்கள் டில்லியில் நடத்தப்பட உள்ளதாம்.
பாலியல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ராம்ரஹிமின் வாழ்க்கை படமாக எடுப்பதுடன், தலைமறைவு இருந்து போலீசாரால் தேடப்பட்டு வரும் ஹரிப்ரீத் வேடத்திலும் நடிப்பதன் மூலம் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார் ராக்கி ஷவந்த்.