கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
குற்றம் 23 படத்தைத் தொடர்ந்து, அறிவழகன் இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். கடந்த சில மாதங்களாகவே தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் அறிவழகன்.
முழுக்க பெண்ணை மையப்படுத்திய அக்கதையில் முன்னணி கதாநாயகி நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி, ஜோதிகா, அனுஷ்கா, மஞ்சு வாரியார் ஆகியோரிடம் கதை சென்னார். மற்ற இருவரும் நடிக்க மறுத்துவிட்ட நிலையில், மஞ்சு வாரியார் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த தகவலை அறிவழகன் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், மஞ்சுவாரியர் நடிப்பது உறுதி என்றே படத்துறையில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், கதாநாயகியை மையப்படுத்திய கதை என்பதால் ஒருவேளை நயன்தாராவுக்கு பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் அவருக்கு கதை சொன்னார் அறிவழகன்.
கதை பிடித்துப்போக, அவர் கேட்ட சம்பளத்தைக் கொடுக்க தயாரிப்பாளர் ஓகே சொல்ல, அறிவழகன் இயக்கவுள்ள சைக்காலஜி த்ரில்லர் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டார் நயன்தாரா.
இப்படத்தை எஸ்.பி சினிமாஸ் தயாரிக்கவுள்ளது. ஒரு கோடி அட்வான்ஸ் கொடுத்து நயன்தாரா உடன் நேற்று அக்ரிமெண்ட் போட்டுவிட்டனர்.