ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமூக பிரச்சனை தொடர்பான தனது கருத்தை யாரும் வேறு விதமாக திரித்து எழுதிவிடக்கூடாது என்பதற்காக தானே தன்னுடைய சொந்த பிளாக்கில் அவ்வப்போது தன் மனதில் பட்டதை எழுதி வருகிறார் நடிகர் மோகன்லால். நீண்டநாட்களாக பிளாக் எதுவும் எழுதாமல் இருந்த மோகன்லால், நேற்று சமீபத்தில் தான் பூடானுக்கு சென்றுவந்த அனுபவம் குறித்து எழுதியுள்ளார். தற்போது தான் நடித்துவரும் 'ஒடியன்' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு திரும்பி வந்துள்ளார் மோகன்லால்.
பூடான் பற்றி அவர் குறிப்பிடுகையில், “எந்த ஒரு பயணமும் கிளம்பிச்சென்ற நம்மை திருப்பி அனுப்பும்போது புதிதாக மாற்றி அனுப்பவேண்டும். அப்படி ஒரு அனுபவம் தான் பூடானில் எனக்கு கிடைத்தது. இந்தப்பயணத்தில் மலைகள், பள்ளத்தாக்குகளில் பயணித்தேன்.அங்குள்ள மக்களிடம் பேசினேன்.குறிப்பாக பூடானில் என்னை கவர்ந்தது அதன் சுத்தம். அங்குள்ளவர்கள் அனைவருமே புறத்தை சுத்தமாக வைத்திருந்தால் தான் அகமும் (உள்ளமும்) தூய்மையாக இருக்கும் என்பதை உணர்ந்துள்ளனர். நான் பூடானுக்கு சென்றது மகிழ்ச்சியாக இருப்பதன் ரகசியத்தை அறிந்துகொள்ள சென்றேன். அறிந்தும் கொண்டே திரும்பியுள்ளேன்” என கூறியுள்ளார் மோகன்லால்.