'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சலீம், தர்மதுரை, அட்டு ஆகிய படங்களை தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். தாரைத்தப்பட்டை, மருது போன்ற படங்களில் வில்லனாக நடித்த அவர், தற்போது தனிமுகம், பில்லா பாண்டி, வேட்டை நாய், காக்க உள்பட பல படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆர்.கே.சுரேஷ்க்கும், சுமங்கலி சீரியல் நாயகி திவ்யாவுக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள் ளது. அக்டோபர் மாதம் அவர்களது திருமணம் நடைபெற உள்ளது.
இதுபற்றி சுமங்கலி திவ்யா கூறுகையில், எங்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்தது. இப்போது தமிழுக்கு புரட்டாசி மாதமாக இருப்பதால் ஐப்பசியில் ஒரு நல்ல நாள் பார்த்து திருமணம் நடைபெற உள்ளது. இன்னும் தேதி முடிவாகவில்லை. மேலும், எங்களது திருமணம் காதல் திருமணமல்ல. பெற்றோரால் நிச்சயப்பட்ட திருமணம். ஆர்.கே.சுரேஷைப்போன்று எனது சொந்த ஊரும் ராமநாதபுரம்தான். அவரது ஊருக்கு அருகில் எனது ஊர் உள்ளது.
மேலும், இப்போது நான் அடங்காதே படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். அதேபோல் சுமங்கலி என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறேன். ஆனால் இதன்பிறகு நான் சினிமா, சீரியல் என எதிலும் ஒப்பந்தமாக மாட்டேன். முழு நேர இல்லத்தரசியாகி விடுவேன். என்றாலும், சுமங்கலி சீரியலில் ஒப்பந்தம் இருப்பதால் சீரியல் முடிகிறவரை நடித்துக்கொடுப்பேன். அதன்பிறகு எந்த சீரியலிலும் கமிட்டாக மாட்டேன் என்கிறார் திவ்யா.