ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படம் மெர்சல். விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியிருக்கிறார். தீபாவளிக்கு இந்த படம் வெளியாகயிருப்பதால் தற்போது இறுதிகட்ட பணிகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்கிறது. அதோடு, நேற்று முன்தினம் மெர்சல் படத்தின் டீசர் வெளியாகி, உலக அளவில் டிரன்டிங் செய்யப்பட்டது. அந்த வகையில், கபாலி, விவேகம் படங்களின் சாதனையை விஜய்யின் மெர்சல் முறியடித்தது.
இந்த நேரத்தில் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர், ஏற்கனவே தான் மெர்சலாயிட்டேன் என்ற பெயரில் ஒரு தலைப்பை 2014-லேயே பதிவு செய்திருப்பதோடு, அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறியதுடன், மெர்சல் தலைப்புக்கு தடைகோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதை விசாரித்த நீதிபதி அக்டோபர் 3-ந்தேதி வரை விளம்பரங்களில் மெர்சல் என்ற தலைப்பை பயன்படுத்த தடை விதித்திருப்பதோடு, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஒருவேளை மெர்சல் தலைப்பை விஜய் படத்துக்கு பயன்படுத்த தடை வருமானால், மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஆளப்போறான் தமிழன் -என்ற பாடல் வரியையே டைட்டீலாக்க அப்படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக ஒரு செய்தி கசிந்துள்ளது.