தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. அதையடுத்து நடித்த அங்காடித்தெரு அவரை முன்னணி நடிகையாக்கியது. பின்னர் எதிர்பார்த்தபடி முன்னணி ஹீரோக்களின் படங்களில் அஞ்சலி நடிக்கவில்லை என்றபோதும், அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். தற்போது பேரன்பு, காளி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி.
இந்த நிலையில், அஞ்சலியின் தங்கை ஆரத்யாவும் தற்போது ஒரு தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறாராம். ஆனால், அஞ்சலி ஆரம்பத்தில் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கூறி வந்த நிலையில், ஆரத்யாவோ கதைக்கேற்ற கிளாமருக்கு நான் ரெடி என வந்த வேகத்திலேயே சூடு காட்டி நடிக்கத் தயாராகி விட்டாராம். நேற்று ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆரத்யா, விரைவில் தனது புதிய படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.