ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மெர்சல் படம் வெளியாகும் அன்றே ஹெச்டி தரத்தில் மெர்சல் படத்தை வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மிரட்டல் விடுத்துள்ளது. தமிழ் சினிமாவிற்கு பெரிய தலைவலியாக இருப்பது திருட்டு விசிடி. இப்போது அதை விட பெரும் தலைவலியாக இருப்பது தமிழ்கன், தமிழ்ராக்கர்ஸ் போன்ற ஆன்லைன் இணையதளங்கள் தான். படம் வெளியாகும் அன்றோ அல்லது அதற்கு முன்போ படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டு தமிழ் சினிமாவை மிரட்டி வருகின்றனர்.
சமீபத்தில் இதுதொடர்பாக கவுரி சங்கர் என்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் தமிழ்கன் என்ற இணையதளத்தின் அட்மின் என்று சொல்லப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவர் கைது செய்யப்பட்டாலும் படங்கள் இணையதளங்களில் வெளியாவது நின்றுவிடவில்லை. சம்பந்தப்பட்ட இணையதளங்களில் தொடர்ந்து புதிய படங்கள் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில் விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாக தயாராகி வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட பாடல்களும், டீசரும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதுடன், மெர்சல் டீசர் உலக சாதனையும் படைத்தது.
இதனால் மெர்சல் படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், "மெர்சல் படத்தை இணையதளத்தில் ஹெச்டி தரத்துடன் வெளியிடுவோம், ஆதரவு தாருங்கள்" என்று தமிழ் ராக்கர்ஸ் டுவிட்டரில் பதிவிட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது விஜய் உள்ளிட்ட ஒட்டுமொத்த மெர்சல் படக்குழுவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதை தடுக்க மெர்சல் குழுவும், தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக களத்தில் இறங்க தயாராகி வருகிறது.