'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மெர்சல் படம் வெளியாகும் அன்றே ஹெச்டி தரத்தில் மெர்சல் படத்தை வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மிரட்டல் விடுத்துள்ளது. தமிழ் சினிமாவிற்கு பெரிய தலைவலியாக இருப்பது திருட்டு விசிடி. இப்போது அதை விட பெரும் தலைவலியாக இருப்பது தமிழ்கன், தமிழ்ராக்கர்ஸ் போன்ற ஆன்லைன் இணையதளங்கள் தான். படம் வெளியாகும் அன்றோ அல்லது அதற்கு முன்போ படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டு தமிழ் சினிமாவை மிரட்டி வருகின்றனர்.
சமீபத்தில் இதுதொடர்பாக கவுரி சங்கர் என்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் தமிழ்கன் என்ற இணையதளத்தின் அட்மின் என்று சொல்லப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவர் கைது செய்யப்பட்டாலும் படங்கள் இணையதளங்களில் வெளியாவது நின்றுவிடவில்லை. சம்பந்தப்பட்ட இணையதளங்களில் தொடர்ந்து புதிய படங்கள் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில் விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாக தயாராகி வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட பாடல்களும், டீசரும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதுடன், மெர்சல் டீசர் உலக சாதனையும் படைத்தது.
இதனால் மெர்சல் படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், "மெர்சல் படத்தை இணையதளத்தில் ஹெச்டி தரத்துடன் வெளியிடுவோம், ஆதரவு தாருங்கள்" என்று தமிழ் ராக்கர்ஸ் டுவிட்டரில் பதிவிட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது விஜய் உள்ளிட்ட ஒட்டுமொத்த மெர்சல் படக்குழுவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதை தடுக்க மெர்சல் குழுவும், தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக களத்தில் இறங்க தயாராகி வருகிறது.