இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் |
மலையாளத்தில் வெளிவந்த மணிசித்ரதாழ் படத்தைத்தான் இயக்குனர் பி.வாசு தமிழில் சந்திரமுகியாகவும், கன்னடத்தில் ஆப்த மித்ராவாகவும் இயக்கினார். இரண்டுமே வெள்ளி விழா படங்களாக அமைந்தது. மலையாளத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரில் தமிழில் ரஜினியும், கன்னடத்தில் விஷ்ணுவர்த்தனும் நடித்தனர். மலையாளத்தில் ஷோபனா நடித்த கேரக்டரில் தமிழில் ஜோதிகாவும், கன்னடத்தில் சவுந்தர்யாவும் நடித்தனர்.
அதன் பிறகு பி.வாசு ஆப்தரட்ஷகா என்ற படத்தை கன்னடத்தில் இயக்கினார். இது ஆப்தமித்ரா சாயல் கொண்ட படம். ஆனால் அதன் தொடர்ச்சி அல்ல. இதிலும் விஷ்ணுவர்த்தன், விமலா ராமன், சந்தியா நடித்தனர். இதுவும் வெற்றி பெற்றது.
இயக்குனர் பி.வாசு சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி அதற்கான ஸ்கிரிப்ட்டும் எழுதினார். ஆனால் ரஜினி சைடிலிருந்து கிரீன் சிக்னல் கிடைக்காததால் இப்போது ஆப்த மித்ராவின் இரண்டாம் பாகத்தை கன்னடத்தில் எடுக்க முடிவு செய்துள்ளார். இதில் விஷ்ணுவர்த்தன் கேரக்டரில் ரவிசந்திரன் நடிக்கலாம் என்று தெரிகிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
ஆப்தமித்ரா 2 கன்னடத்தில் வெற்றி பெற்றால் சந்திரமுகி இரண்டாம் பாகத்துக்கு ரஜினி சைடிலிருந்து கிரீன் சிக்னல் கிடைக்கும் என்ற பி.வாசு எதிர்பார்க்கிறார்.