அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிரபல தமிழ் நடிகர் ஜெய். சுப்பிரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இசை அமைப்பாளர் தேவாவின் தம்பி மகன்.
சில வருடங்களுக்கு முன்பு மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே போதையில் கார் ஓட்டி ஒரு முதியவரை காயப்படுத்தினார். இந்த சம்பவத்தில் அவர் அபராதம் கட்டி சிறைத் தண்டனையில் இருந்து தப்பினார். தற்போது இரண்டாவது முறையாக போதையில் கார் ஓட்டி அடையாறு பாலத்தில் விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் நல்ல வேளையாக யாரும் காயமடையவில்லை. அடையாறு போக்குவரத்து போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சொந்த ஜாமினில் உடனே விடுதலை செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்னும் சில பூதாகரங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஜெய்க்கு இது வழக்கமான ஒன்று, மயிலாப்பூர் சம்பவமும், அடையாறு சம்பவமும் மட்டுமே வழக்காக மாறியுள்ளது. அடையாறு வழக்கில் ஜெய் கைது செய்யப்பட்டபோது அவரிடம் ஒரிஜினல் லைசென்ஸ் இல்லை. தற்போது ஓட்டுனர்கள் ஒரிஜினல் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்பதை அவர் கடைபிடிக்கவில்லை. அதுவே முதல் குற்றம், அடுத்து குடிபோதையில் இருந்தது. அதற்கடுத்தது வண்டிக்கு இன்சூரன்ஸ் இல்லை. பதிவு சான்று புத்தகமும் (ஆர்.சி) இல்லை. அதுமட்டுமல்ல வண்டியின் பதிவு எண் விதிமுறைப்படி எழுதப்படவில்லை. இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவாகி உள்ளது. இதனால் அவர் மீண்டும் கைது செய்யப்படலாம், நிரந்தரமாக அவரது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படலாம். 6 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கலாம். என்கிறார்கள்.