தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள 'பறவ' படமும் இந்த ஓணம் ரேசில் கலந்து கொள்வதாக முதலில் அறிவிக்கப்பட்டு தற்போது செப்-21க்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு நேற்று ரிலீசாகியுள்ளது. துல்கர் சல்மானின் நண்பரும் அவருடன் இணைந்து நான்கு படங்களில் காமெடி நடிகராக நடித்தவருமான 'பிரேமம்' புகழ் சௌபின் சாஹிர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். புறா பந்தயத்தை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது.
இந்தப்படத்தில் துல்கர் தான் ஹீரோ என சொல்ல முடியாவிட்டாலும், படம் முழுவதும் வரும் வகையில் நீட்டிக்கப்பட்ட ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் துல்கர். நேற்று இந்தப்படம் வெளியாகியுள்ள நிலையில் தனது ரசிகர்களுக்கு துல்கர் சல்மான் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.
“இந்தப்படம் பார்க்கும் ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் தியேட்டரில் எனது காட்சிகளை படம்பிடிப்பதோ, அல்லது பாடல்கள், சண்டைக்காட்சிகளை படம்பிடிப்பதோ, மற்றும் அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவதோ கூடாது” என்று கூறியுள்ளார். தவறான நோக்கத்துடன் நீங்கள் காட்சிகளை படம் பிடிக்காவிட்டாலும்கூட, அது சட்டப்படி தவறான விஷயம் என்றும் அறிவுறுத்தியுள்ளார் துல்கர் சல்மான்.