தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சில வருடங்களுக்கு முன்புவரை பிசியான ஹீரோவாக வருடத்திற்கு நான்கைந்து படங்களில் நடித்து வந்தார் விமல். அவரது நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் 'மாப்பிள்ளை சிங்கம்'. அந்தப் படத்திற்குப் பிறகு விமல் நடிப்பில் வேறெந்த படமும் இதுவரை ரிலீஸாகவில்லை.
இதனால் தனது சொந்த தயாரிப்பில், பூபதி பாண்டியன் இயக்கத்தில் 'மன்னார் வளைகுடா' படத்தை ஆரம்பித்து அதில் நடித்து முடித்துள்ளார் விமல். விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப்படத்தைத் தொடர்ந்து மேலும் 2 புதிய படங்களில் நடிக்கவிருகிறார் விமல்.
சசிகுமார் நடித்து வெளிவந்த 'வெற்றிவேல்' படத்தை இயக்கிய வசந்தமணி இயக்கவிருக்கும் புதிய படம் அதில் ஒன்று. டி.இமான் இசையமைக்கவிருக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனியும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.
அதோடு, 2010ல் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற 'களவாணி' படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார் விமல். முதல் பாகத்தை இயக்கிய சற்குணமே இயக்கும் இப்படத்தில் சூரி, கஞ்சா கருப்பு ஆகியோரும் நடிக்கிறார்கள்.
கதாநாயகியாக நடிக்க ஓவியாவை அணுகியபோது பெரிய சம்பளம் கேட்டதால், வேறு நாயகியைத் தேடி வருகின்றனர். கலகலப்பு -2 படத்தில் விமல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் தற்போது ஜீவாவும், ஜெய்யும் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.