ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வடிவேலுவின் காமெடி கூட்டணியில் உள்ள நடிகர்களில் தாடி பாலாஜியும் ஒருவர். இவர் சமீபகாலமாக விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வருகிறார். மேலும், எலி, தெனாலிராமன் படங்களுக்குப்பிறகு வடிவேலு காமெடியனாக நடித்த கத்திச்சண்டை படத்திலும் அவருடன் இணைந்து நடித்தார்.
இந்நிலையில், வடிவேலுவுடன் தான் நடித்து வருவதைப்பற்றி தாடி பாலாஜி கூறும்போது, தான் நடிக்கும் பல படங்களில் எனக்கு காமெடி வாய்ப்பு கொடுத்தவர் வடிவேலு. அவர் ஹீரோ ஆனது என்னைப்போன்றவர்களுக்கு இழப்புதான். அதனால் தான் சின்னத்திரைக்கு வர வேண்டிய நிலை உருவானது. என்றாலும் பிசியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.
மேலும், முன்பெல்லாம் வடிவேலு ஒரு காட்சியில் நடிக்கும்போது அந்த காட்சி குறித்து மற்றவர்களிடம் கருத்தே கேட்க மாட்டார். ஒரு காட்சியில் நடித்து முடித்ததும், ஓகே அடுத்த சீனுக்கு போலாம் என்று போய்க்கொண்டேயிருப்பார். ஆனால் இப்போது நடித்து முடித்ததும் எப்படி இருக்கு? என்று அருகில் உள்ளவர்களிடம் கருத்து கேட்கிறார். காரணம், காமெடி ஒர்க் அவுட்டாகியுள்ளதா? இல்லையா? என்ற சந்தேகம் அவருக்கு ஏற்படுகிறது. ஆக, அவருக்கு தனது காமெடி மீது பயம் வந்துவிட்டது. அதனால் தான் மற்றவர்களிடம் கருத்து கேட்கிறார் என்கிறார் தாடி பாலாஜி.