ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடத்தி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் தொடங்கியது. ஆனால் செப்டம்பர் 24-ந் தேதியான நாளையோடு இந்த சீசன் முடிவடைகிறதாம். இறுதிப்போட்டியில் ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, அர்ச்சனா, ஹரி தேஜா, நவ்தீப் மற்றும் சிவா பாலாஜி ஆகிய ஐந்து பேரும் களத்தில் உள்ளனர். இந்த ஐவரில் ஒருவர் தான் வெற்றி பெற போகிறார். யார் அந்த வெற்றியாளர் என்பது நாளை(செப்., 24) தெரிந்து விடும்.
இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க நாள் அன்று ஒரு லைவ் டான்ஸ் ஆடியபடியே நிகழ்ச்சியை தொடங்கிய ஜூனியர் என்டிஆர், ஜெய் லவகுசா படத்தில் நடித்தபடியே பிக்பாஸ் நிகழ்ச்சியை ரொம்ப கலகலப்பாக நடத்தி வந்தார்.
மேலும், மா டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் நடத்தி வந்த நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை இந்த சீசனின் இறுதி நாள் என்பதால், மாலை 6 மணி தொடங்கி இரவு 10 மணி வரை நடத்துகிறார்கள். அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்கள் அனைவரையும் பேட்டி காண்பதோடு, வெற்றிபெற்றவர்களையும் அறிவிக்கிறாராம் ஜூனியர் என்டிஆர்.