'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபுசாலமனின் கயல் படத்தில் அறிமுகமானவர் ஆனந்தி. அதன்பிறகு சண்டிவீரன், திரிஷா இல்லேன்னா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, எனக்கு இன்னொரு பேரு இருக்கு, பண்டிகை என பல படங்களில் நடித்தவர், தற்போது மன்னார் வகையறா, பரியேறும் பெருமாள், என் ஆளோட செருப்ப காணோம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் என் ஆளோட செருப்ப காணோம் படத்தில் பசங்க படத்தில் நடித்த பக்கோடாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் கயல் ஆனந்தி. இப்போது பக்கோடாவின் பெயர் தமிழ் என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க வேறு சில முன்னணி நடிகைகளை டைரக்டர் ஜெகன் அணுகியபோது பக்கோடா நாயகன் என்றதும் நடிக்க மறுத்து விட்டார்களாம்.
ஆனால், கயல் ஆனந்தியிடம் அந்த கதையை சொல்லி விட்டு இவர் தான் ஹீரோ என்றதும் துளியும் தயங்காமல் நடிக்க சம்மதம் சொன்னாராம். காரணம், என் ஆளோட செருப்ப காணோம் படம் முழுக் முழுக்க ஆனந்தியை சுற்றி நடக்கும் கதை தானாம். அந்த வகையில், இந்த படம் ஆனந்திக்கு முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள்.
மேலும், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இரவில் வருகிறா என்ற பாடலின் வீடியோ வெளியான பிறகு அந்த படத்தின் இமேஜே மாறி விட்டது. குறிப்பாக, அந்த பாடல் காட்சியைப்பார்த்து அசந்து போன கயல் ஆனந்தி, என்னை இவ்வளவு அழகாக யாரும் காண்பித்ததில்லை. பாடல் காட்சியின் மேக்கிங் ரொம்ப பிரமாதமாக இருக்கிறது என்று படக்குழுவிடம் தனது மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்.