மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பைரவா படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படம் மெர்சல். தெறியை தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படமாக ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர். நேற்று(செப்.,21) தான் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு உலகளவில் டிரண்ட்டாகி, அதிக பார்வையாளர்கள், லைக்ஸ்... என சாதனை மேல் சாதனை படைத்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் மெர்சல் படத்திற்கு இப்போது புதிதாக ஒரு சிக்கல் உருவாகி இருக்கிறது. தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், ஏ.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் "மெர்சலாயிட்டேன்" என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து வருகிறேன். இதற்கான தலைப்பை 2014-ம் ஆண்டிலே பதிவு செய்திருக்கிறேன். தற்போது அந்த தலைப்பை விஜய் படத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். ஆகவே, மெர்சல் படத்தின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தமது மனுவில் கோரியிருந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், அக்., 3-ம் தேதி வரை மெர்சல் படத்தின் விளம்பரத்தில் மெர்சல் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது. அதோடு இதுதொடர்பாக தேனாண்டாள் பிலிம்ஸ் பதிலளிக்க உத்தரவிட்டது.