இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாளத்தில் இன்று வெளியாகி இருக்கும் 'போக்கிரி சைமன்' என்கிற படத்துக்கு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கேரளாவில் விஜய்க்கென ரசிகர்கள் அதிகம் இருப்பதால், அதை பின்னணியாக கொண்டு தற்போது விஜய்யின் கேரக்டரையும் அவரது தீவிர ரசிகர்கள் மூவரையும் மையப்படுத்தி 'போக்கிரி சைமன்' என்கிற பெயரில் ஒரு படத்தையே உருவாக்கி வருகின்றனர். இதில் விஜய் ரசிகராக 'போக்கிரி சைமன்' என்கிற கேரக்டரில் துல்கரின் நண்பரான சன்னி வெய்ன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரயாக மார்ட்டின் நடித்துள்ள இந்தப்படத்தை ஜிஜோ ஆண்டனி என்பவர் இயக்கியுள்ளார்.
இன்று இந்தப்படம் வெளியாவதையொட்டி, படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் சென்னை வந்து விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரனை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர். அதை தொடர்ந்து இந்தப்படத்திற்கு தனது வாழ்த்துக்களை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார் எஸ்.ஏ.சி.
அதில், “மம்முட்டி, மோகன்லால் ஆகியோரின் ரசிகர்களை பற்றிய படங்கள் கேரளாவில் வெளிவந்திருக்கின்றன. அதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஆனால் என் மகன் விஜய்யை, அவரது ரசிகர்களை பற்றிய படம் ஒன்று இன்று மலையாளத்தில் வெளியாவது சந்தோஷமாக இருக்கிறது. விஜய்க்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் நடித்த போக்கிரி எப்படி மிகப்பெரிய வெற்றியை பெற்றதோ, அதே அளவு வெற்றியை இந்த 'போக்கிரி சைமன்' படமும் பெறுவது நிச்சயம்” என வாழ்த்தியுள்ளார் எஸ்.ஏ.சி.