ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீராஜாஸ்மின், ராஜ்கிரண் நடிப்பில் சுமார் 12 வருடங்களுக்கு முன் அதாவது 2005-ஆம் வருடத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் 'சண்டக்கோழி'. இந்த படத்தின் ரிலீஸுக்கு முன்பே விஷால் தரப்புக்கும் லிங்குசாமிக்கும் தகராறு ஏற்பட்டது.
சுமார் 5 வருடங்களுக்கு மேலாக முறைத்துக் கொண்டு திரிந்த இருவரும் சில வருடங்களுக்கு முன் ராசியானார்கள். அதன் பிறகு சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தன். இது சம்பந்தமான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார் லிங்குசாமி. ஆனால் அறிவித்தபடி சண்டக்கோழி-2 படத்தின் படப்பிடிப்பு துவங்கவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்திற்காக சென்னை, பின்னி மில்லில் மிகப் பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணி துவங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. கோயில் திருவிழா போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த செட்டில் 'சண்டைக்கோழி-2'வின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
விஷால், கீர்த்தி சுரேஷ் முதன் முதலாக இணைந்து நடிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது. விஷாலின், விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த செட்டிலேயே தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண் உட்பட சுமார் 25 பிரபலமான நடிகர், நடிகைகள் இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்கின்றனர்.