பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
துணிச்சலான, புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் விஜய் டி.வி என்றைக்குமே முன்னணியில் இருக்கிறது. அந்த வரிசையில் அடுத்து அறிமுகப்படுத்துகிறது திரிலிங்கான யெஸ் ஆர் நோ என்கிற கேம் ஷோவை.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர் ஒரு காரியத்தை செய்வார். பார்வையாளர்களாக இருக்கிறவர்கள் அவர் அதை செய்வாரா மாட்டாரா என்பதை யெஸ் ஆர் நோ சொல்லி தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக ஒரு சிறுமியின் தலையில் ஆப்பிளை வைத்து அதனை தூரத்திலிருந்து ஒருவர் அம்பால் அந்த ஆப்பிளை உடைப்பார் என்பது போட்டி. இது அவரால் முடியுமா முடியாதா என்பது எஸ் ஆர் நோவுக்கான விஷயம். இப்படி 128 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அவர்களிலிருந்து ஒருவர் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டு பெருந் தொகை பரிசாக வழங்கப்பட இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி நாளை (23ந் தேதி) தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதனை பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் மற்றும் சினிமா நடிகர் ஜெகன் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு வாரமும் பல துறைகளில் சாதனை படைத்த நான்கு நட்சத்திர வீரர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.