இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
தயாரிப்பாளர், இயக்குனர், இசை அமைப்பாளர் என, இப்படி பன்முக திறன் உடையவர், எஸ்.ஜே.சூர்யா. சமீப காலமாக, நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஸ்பைடர், மெர்சல் என, இரண்டு படங்களிலும் வில்லனாக நடித்து, ரசிகர்களை மிரட்டியுள்ளார்; அவருடன் ஒரு சந்திப்பு:
ஒரே நேரத்தில், ஸ்பைடர், மெர்சல் என, இரண்டு படங்களிலும் வில்லன் வாய்ப்பு கிடைத்தது எப்படி?
எல்லாமே, தானாக அமைந்தது தான். இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக போராடியிருக்கிறேன். அந்த போராட்டங்களுக்கு இப்போது தான், பலன் கிடைக்க துவங்கியுள்ளது. என் லட்சியமே, நடிப்பது தான். இப்போது தான், மக்கள் என்னை நடிகனாக ஏற்றுக் கொள்ள துவங்கியுள்ளனர் என, நினைக்கிறேன்.
முருகதாஸ் இயக்கத்தில் நடித்த அனுபவம்?
குஷி படத்தை இயக்கும் போது, முருகதாஸ், எனக்கு, 10 நாட்கள் வேலை பார்த்துக் கொடுத்தார். நல்ல நண்பர். இப்போது, நாட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக, முருகதாஸ், உயர்ந்து நிற்கிறார். பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், அவரது படங்களில் நடிக்க காத்துக் கிடக்கின்றனர். ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடிக்கும்படி, அவர் கேட்டதும், தயங்காமல் சம்மதித்தேன்.
மகேஷ் பாபு பற்றி?
தமிழில் எடுத்த நியூ படத்தை, தெலுங்கில் எடுத்த போது, அதில், மகேஷ் பாபுவைத் தான், ஹீரோவாக போட்டேன். அதனால், எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. அவருக்கு, நன்றாக தமிழ் பேசத் தெரியும். இங்கு விஜய் எப்படியோ, அதே போல், தெலுங்கில் மகேஷ் பாபு.
ஸ்பைடர் படம் எதை பற்றி பேசும்?
என்னையும், மகேஷ் பாபுவையும் சுற்றித் தான், படத்தின் மொத்த கதையும் இருக்கும். நம் நாட்டில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, இந்த கதையை தயார் செய்துள்ளார், இயக்குனர். ரமணா, துப்பாக்கி, கஜினி, கத்தி படங்களை விட இந்த படத்தின் கதை, வித்தியாசமாக இருக்கும். முற்றிலும் வேறு களத்தை கையில் எடுத்துள்ளார், இயக்குனர். இந்த படத்தை பார்க்கும்போது, ஜெயகாந்தன் நாவலை படிப்பது போன்ற உணர்வு ஏற்படும். மாற்றம் தான் வாழ்க்கையின் அடிப்படை என்ற விஷயத்தை, இந்த படத்தில் சொல்லியிருக்கிறார், இயக்குனர்.
படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தீர்களே?
கிட்டதட்ட ஆறு மாத காலம் ப்ருஸ்லீ உடம்பு போல கொண்டு வந்தேன். அந்த உடலமைப்பு படத்திற்கு எனக்கு கை கொடுத்தது. கிளைமாக்ஸில் நானும், மகேஷ் பாபுவும் போடும் சண்டை காட்சி பெரிய அளவில் வந்துள்ளது.
ஹீரோவாக நடிப்பது, வில்லனாக நடிப்பது; எது சுலபம்?
என்னை கேட்டால், ஹீரோவாக மட்டும் நடித்து விட்டு, ஹீரோ என, சொல்லிக் கொள்வதில் உடன்பாடு இல்லை. இதுவரை, ஒன்பது படங்களில் ஹீரோவாக நடித்து விட்டேன்; அதற்காக, என்னை ஹீரோ எனக்கூற மாட்டேன். வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும்; மக்கள், என் நடிப்பை ஏற்க வேண்டும்; அப்போது தான், ஹீரோவாக முடியும்.
குஷி விஜய்க்கும், மெர்சல் விஜய்க்கும் என்ன வித்யாசம்?
மெர்சல் படத்தில் ஒரு காட்சியில் விஜய், என்னை அடிக்கணும் அதில் ரொம்ப தயங்கி தயங்கி அடித்தார். நல்லா அடிங்க என்று சொன்னேன். அதன்பிறகு தான் என்னை அடித்தார். அப்படி ஒரு நல்ல மனிதர். என் நடிப்பை மானிட்டரில் பார்த்து பாராட்டுவார். விஜய்யிடம் இப்போது பொறுப்பு அதிகமாகியுள்ளது. அவரின் பக்குவம், அன்பை காட்டும் விதம், உழைப்பு இப்படி எல்லா வகையிலும் விஜய் அதிகப்படியாக முன்னேறி இருக்கிறார்.
நீங்க ஓவர் ஆக்டிங் செய்வதாக ஒரு பேச்சு இருக்கே?
நான் மிக சிறந்த நடிகன் என்று எப்போதோ பிக்ஸ் செய்துவிட்டேன். ஆனால் மக்கள் என்னை நல்ல நடிகன் என்று சொல்ல வேண்டும். சில இடங்களில் நான் ஓவராக நடிப்பதாக சொல்வது உண்மை. இயக்குநராகி விட்டு நடிக்க வருவதால் வந்த பிரச்னை அது. அதை இப்போது தான் மாற்றி இருக்கிறேன். என் ஊரில் அக்கா கணவர் என்னிடத்தில், "அந்த படத்தில் எவ்ளோ சம்பளம் கொடுத்தாங்க என்றார் நான் ஒரு தொகையை சொன்னே். அதற்கு மட்டும் நடிக்க வேண்டியது தானே, ஏன் அதற்கு மேல் நடிக்கிற என்று ஓப்பனாக சொன்னார். அதன்பிறகு என்ன முடிந்தளவு மாற்றி வருகிறேன்.
இசை படத்தில், இசை அமைப்பாளரானது எப்படி; குறுகிய காலத்தில் இசையமைப்பாளராவது சாத்தியமா?
ஒரு விஷயம் உங்களிடம் சொல்கிறேன்; இசை கற்று கொண்டால், எல்லாம் மாறும் என்பது உண்மை தான். நான், நல்ல வழியில் மாறுவதற்கு, இசை கற்றுக் கொண்டது, மிக உதவியாக இருந்தது. இசைக்காக, ஒரு வருஷத்தை முழுமையாக ஒதுக்கி விட்டேன். வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தவில்லை. பல மாஸ்டர்களிடம் முறையாக பயிற்சி பெற்ற பின் தான், இசையமைத்தேன்.
தொடர்ந்து நடிப்பில் தான், முழு கவனத்தையும் செலுத்தப் போகிறீர்களா?
முழுக்க முழுக்க இனி நடிப்பு தான்; எனக்கு இது தாமதமான அங்கீகாரம் தான். எம்.ஜி.ஆர்., 42 வயதில் தான், ஹீரோவாக நடித்தார்; அதற்காக, 35 வயதில்,
அவருக்கு திறமை இல்லை எனக்கூற முடியாது. அமிதாப், ரஜினி, விக்ரம் என, பலரும், தாமதமகாத் தான் நடிக்க வந்தனர்.
இயக்குனராக பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்ற ஆசை இல்லையா ?
அந்த ஆசைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டேன்; தேவைப்படும் போது, அந்த மூட்டையை எடுத்துக் கொள்வேன்.