தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'நடிக்க வந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது; 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டேன். ஆனால், இதில், எனக்கு மன நிறைவை தந்த படம் என்றால், பர்பி உள்ளிட்ட ஒருசில படங்களை மட்டுமே கூற முடியும்' என, விரக்தியுடன் பேசுகிறார், இலியானா.
துவக்கத்தில், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்த இவர், சமீபகாலமாகத் தான், ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இதுவரையிலான, தன் திரையுலக பயணங்கள் குறித்து, மனம் திறந்து பேசிய அவர், 'கதை, அதில் எனக்குள்ள முக்கியத்துவம் போன்ற எதையுமே கேட்காமல், தெலுங்கு, தமிழ் படங்களில் நடிக்க சம்மதித்தேன்; இப்போது, அதையெல்லாம் யோசித்துப் பார்த்தால், குழந்தை தனத்துடன் நடந்து கொண்டதாகவே தெரிகிறது; இனிமேல், எனக்கும், என் நடிப்புக்கும் முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க சம்மதிக்க மாட்டேன்.
'ஒரு படத்தில் நடித்தாலும், நல்ல படத்தில் மட்டுமே நடிப்பேன்' என்கிறார், இலியானா.