தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கைதி எண்-150 படத்தை அடுத்து சுரேந்தர் ரெட்டி இயக்கும் சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடிக்கிறார் சிரஞ்சீவி. ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட தியாகி உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்பவரின் வாழ்க்கை கதையில் உருவாகும் இந்த படத்தில் சுதந்திர போராட்டத்தில் அவர் கலந்து கொண்ட முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 20-ந்தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது.
மேலும், இந்த படத்திற்காக கலை இயக்குனர் ராஜீவன் ஐதராபாத்திலுள்ள நானக்ராம்கடா என்ற ஸ்டுடியோவில் உய்யலவாடா என்ற கிராமத்தின் செட் போட்டு உருவாக்கி வருகிறார். அதேபோல் இன்னொரு இடத்தில் ஒரு கோட்டை போன்ற செட் அமைக்கப்பட்டு வருகிறதாம். இந்த படத்தில் பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் நடந்த சில சொல்லப்படாத அதிர்ச்சி தரும் சம்பவங்களும் இடம்பெறுகிறதாம்.
அந்த காட்சிகளில் விஎப்எக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாம். அதனால், தற்போது லண்டன் சென்று விஎப்எக்ஸ் டீமுடன் விவாதித்து வருகிறாராம் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி. மேலும், இந்த படத்தில் சிரஞ்சீவி, தாடி கெட்டப்பில் தோன்றுவதால், கடந்த சில மாதங்களாக தாடி, மீசையை பெரிய அளவில் வளர்த்து வருகிறார்.