தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குடிபோதையில் காரை ஓட்டி சென்று விபத்துக்குள்ளாக்கி இருக்கிறார் நடிகர் ஜெய். இந்த சம்பவத்தின் போது நடிகர் பிரேம்ஜி அமரனும் உடன் இருந்திருக்கிறார்.
நடிகர்கள் ஜெய், பிரேம்ஜி அமரன் இருவரும் சென்னை 28, கோவா, நவீன சரஸ்வதி சபதம், சென்னை 28 - II உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இருவரும் நல்ல நண்பர்கள்.
இந்நிலையில் நடிகர் ஜெய் இன்று(செப்.,21) அதிகாலை சென்னை மந்தைவெளியிலிருந்து அடையாறு நோக்கி தனது ஆடி காரில் வேகமாக பயணித்திருக்கிறார். உடன் பிரோம்ஜி அமரனும் சென்றுள்ளார். இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர்.
எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற கார், சென்னை அடையாறு மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீதி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
குடிபோதையில் காரை ஓட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஜெய் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதோடு அவர் பயணித்த காரையும் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் ஜெய், சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.