அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகி விட்டது. இந்த பெப்சி ஸ்டிரைக் காரணமாக விக்ரமின் ஸ்கெட்ச், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், அர்ஜூனின் சொல்லிவிடவா என தீபாவளிக்கு விஜய் படத்துடன் மோதவிருந்த சில படங்கள் பின்வாங்கி விட்டன. ஆனால் எதிர்பாராதவிதமாக முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள கொடிவீரன் படம் தீபாவளிக்கு வெளியாவதாக தற்போது தகவல் தெரிவிக்கின்றன.
காரணம் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வந்ததோடு, ஸ்டிரைக் நேரத்தில் மதுரையில் இறுதிகட்ட பணிகள் நடத்தப்பட்டு வந்தது. அதனால், தற்போது கொடிவீரன் இறுதிகட்ட பணிகள் நிறை வடையும் தருவாயில் உள்ளதாம். அதனால், தீபாவளிக்கு விஜய்யின் மெர்சலுடன், கொடிவீரனும் திரைக்கு வரத் தயாராகி கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.