ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு, பழம்பெரும் நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் பெயரை மத்திய அரச பரிசீலித்து வருகிறது.
பாரத ரத்னா விருது அரசியல் தலைவர்களுக்கும், சமூக சேவகர்களுக்கும் வழங்கப்படுகிறது. திரைத் துறையினர் இந்த விருதை பெருவது மிகவும் அபூர்வமானது. இதுவரை எம்.எஸ்.சுப்புலட்சுமி, லதா மங்கேஷ்கர், எம்.ஜி.ஆர் ஆகிய மூவர் மட்டுமே திரைத்துறையில் இருந்து விருது பெற்றவர்கள். இந்த மூவரும் திரைத்துறை அல்லாமல் கலை மற்றும் மக்கள் சேவைக்காக சேர்த்து விருது பெற்றவர்கள்.
என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும், தெலுங்கு தேசம் கட்சியினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். பார்லிமென்ட்டிலும் அக்கட்சியினர் இதனை வலியுறுத்தி வருகிறார்கள். விஜயவாடா தொகுதி எம்பி., கேசினேனி நானி கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா வழ்ங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பார்லிமென்ட்டில் பேசினார். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது.
அந்த கடித்தில் "என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது பற்றி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஆலோசனை நடந்து வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.