'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பைரவா படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ள விஜய் ஒவ்வொரு வேடத்திற்கும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியபோது எதிர்பாராத விதமாக பெப்சி-தயாரிப்பாளர் சங்கத்திற்கிடையே சம்பள பிரச்சினை சம்பந்தமாக கருத்து முரண்பாடு ஏற்பட்டதால் வேலைநிறுத்தம் ஏற்பட்டு மெர்சல், காலா உள்ளிட்ட பல படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
பின்னர், பேச்சுவார்த்தைக்குப்பிறகு பெப்சி வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து சில நாட்களாக மெர்சல் படத்தின் பேட்ஜ் ஒர்க் பணிகளை ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடர்ந்தார் டைரக்டர் அட்லி. அதில் விஜய் நடித்து வந்தார். அதையடுத்து மெர்சல் படத்தின் அனைத்துக்கட்ட படப்பிடிப்பும் முடிந்து பூசணிக்காய் உடைக்கப்பட்டு விட்டது.
அடுத்தபடியாக துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கயிருக்கும் விஜய், ஓய்வெடுப்பதற்காக நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து பாரசிலோனா நகருக்கு பறந்துள்ளார். அங்கு சில நாட்கள் தங்கி ஓய்வெடுத்துவிட்டு, மெர்சல் ரிலீஸ்க்கு முன்பாக சென்னை திரும்புகிறார். ஜனவரி மாதம் முதல் முருகதாஸ் படத்தில் பங்கேற்கிறார்.
இதனிடையே மெர்சல் படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ள நிலையில், அதுதொடர்பான விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜய் காளையுடன் இருக்க, அருகில் அவரது மனைவி ரோலில் நடிக்கும் நித்யா மேனன் மற்றும் சிறு வயது விஜய் போஸ்டரும் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த போட்டோவை விஜய் ரசிகர்கள் அதிகளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.