டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஆதித்யா சேனலில் பல காமெடி நிகழ்ச்சிகளை வழங்கி வருபவர் கதிர். சின்னத்திரையில் பெருவாரியான நேயர்களை கவர்ந்த எனக்கு சினிமாவிலும் பெரிய காமெடியனாகி ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே எனது ஆசை. அதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறேன் என்கிறார் கதிர்.
இதுகுறித்து கதிர் மேலும் கூறுகையில், தற்போது ஆதித்யா சேனலில் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். அதன்காரணமாக பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோரை கவர்ந்துள்ளேன். குறிப்பாக எனது காமெடி நிகழ்ச்சிகளில் சிரிக்க வைப்பது மட்டுமின்றி சிந்திக்க வைப்பது போன்ற விசயங்களையும் வெளிப்படுத்தி வருகிறேன். சில சமயங்களில் சமூக கருத்துக்களையும் காமெடியில் கலந்து வருகிறேன்.
அதேபோல்தான் சினிமாவிலும் சிரிக்க வைப்பது மட்டுமின்றி அவ்வப்போது கருத்து சொல்லும் காமெடிகளையும் செய்ய ஆசைப்படுகிறேன். அதற்கான சந்தர்ப்பம் சூழல் தான் அமைய வேண்டும். அது டைரக்டர்களின் கையில் இருக்கிறது. தற்போது மதுரவீரன், விதிமதி, வீரா உள்பட பல படங்களில் நடிக்கிறேன்.
சில படங்களில் மற்ற காமெடியன்களுடன் இணைந்து நடித்தபோதும், ஓரிரு படங்களில் தனிக்காமெடியனாகவும் நடிக்கிறேன். முடிந்தவரை இந்த படங்கள் மூலம் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து விட வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். அதேசமயம், சினிமாவில் பிசியாக விட்டதால் சின்னத்திரையை மறந்து விட மாட்டேன். என்னை ஒரு நடிகனாக வளர்த்து ஆளாக்கியது சின்னத்திரைதான். அதனால், எப்போதுமே சினிமா-சின்னத்திரை என இரட்டை குதிரையில் நான் சவாரி செய்வேன் என்கிறார் கதிர்.