பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள முன்னணி நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 70 நாட்களாக அவர் சிறையில் இருக்கிறார். இதுவரை 4 முறை அவர் ஜாமின் மனு தாக்கல் செய்தும் 4 முறையும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
சமூகத்தில் செல்வாக்கும் பணபலமும் உள்ள திலீப், சாட்சிகளை கலைத்து விடுவார் என்று போலீசார் ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருதையடுத்து அவரது ஜாமின் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டது. இடையில் அவரது தந்தையின் நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மட்டும் 2 மணி நேரம் பரோல் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 5வது முறையாக நேற்று மீண்டும் திலீப், சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் கோபம் அடைந்த நீதிமன்றம் திலீபிற்கும், அவரது வழக்கறிஞருக்கும் கடும் கண்டனம் தெரிவித்தது.
"திலீப்புக்கு கடைசியாக சில நாட்களுக்கு முன்புதான் ஜாமின் மறுக்கப்பட்டது. அதற்குள் நிலைமை மாறிவிட்டதா? மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்வதற்கு முன்பிருந்த நிலையில் ஏதாவது மாற்றம் வந்திருக்க வேண்டும். அப்படி ஏதாவது வந்திருக்கிறதா?" என்று கேட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் 26ந் தேதிக்கு தள்ளி வைத்தது.
திலீபின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனின் முன் ஜாமின் மனுவும், நண்பர் நாதிர்ஷாவின் முன்ஜாமின் மனுவும் வருகிற 25ந் தேதி விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.