தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் கேரக்டர் நடிகராக என்ட்ரி கொடுத்து பின்னர் அவதாரம் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்தவர் நாசர். பல படங்களில் அதிரடி வில்லனாகவும் நடித்திருக்கிறார். ஆனால் சமீபகாலமாக அவரை குணசித்ர நடிகராக்கிவிட்ட இயக்குனர்கள், சில படங்களில் காமெடியனாகவும் மாற்றி வருகிறார்கள்.
இதுபற்றி நாசர் கூறுகையில், இதுவரை நான் பலதரப்பட்ட வேடங்களில் நடித்து விட்டேன். எந்தமாதிரியான வேடங்களில் நடிக்க அழைத்தாலும் நான் மறுப்பதில்லை. ஒரு நடிகன் எந்தமாதிரியான வேடம் கொடுத்தாலும் நடிப்பது தான் அழகு என்பதால் நம்பிக்கொடுக்கிற வேடங்களை மறுக்காமல் நடித்து வருகிறேன். ஆனால், தற்போது சில படங்களில் என்னை காமெடியனாக்கி வருகிறார்கள். நானும் காமெடி வேடங்களில் நடித்து விடுவேன். என்றாலும் அதை ரசிகர்கள் எந்த அளவுக்கு ரசிப்பார்கள் என்பதை நினைக்கும்போது எனக்கு கொஞ்சம் பயம் ஏற்படும்.
அப்படி மனதளவில் பயம் ஏற்படும்போது டைரக்டர்களிடம் சொல்வேன். அப்போது அவர்கள், நல்லாதான் பண்றீங்க. சிரிக்கிற மாதிரிதான் இருக்கு என்பார்கள். அப்படி அவர்கள் கொடுக்கும் தைரியத்தில் நடித்து வருகிறேன். தற்போது நான் காமெடி வேடங்களில் நடித்துள்ள படங்கள் திரைக்கு வரும்போது ரசிகர்கள் அங்கீகரித்து விட்டால் சந்தோசப்படுவேன் என்கிறார் நாசர்.