பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சாட்டை படத்தில் நாயகியாக நடித்தவர் மலையாள நடிகை மகிமா நம்பியார். அதையடுத்து சில படங்களில் நடித்தவர், அறிவழகன் இயக்கிய குற்றம் -23 படத்தில் நடித்து கவனிக்கப்படும் நடிகையானவர், தற்போது சசிகுமாருடன் கொடிவீரன், ஜி.வி.பிரகாசுடன் அய்யங்கரன், அருள்நிதியுடன் இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் சசிகுமாரின் கொடி வீரன் படத்தில் மதுரைக்கார பெண்ணாக நடித்திருக்கிறார் மகிமா நம்பியார். கிராமத்து பெண்களைப்போன்று பாவாடை தாவணி கெட்டப்பில் துறுதுறு பெண்ணாக நடித்திருக்கிறாராம்.
இந்த படத்தில் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடித்து வந்தபோது, அங்குள்ளவர்கள் தன்னிடம் அதிக பாசத்துடன் தங்களது குடும்பத்தில் ஒருவர் போலவே நினைத்து பழகினார்கள். அவர்களின் அன்பில் நான் நெகிழ்ந்து போனேன் என்கிறார் மகிமா.