'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரதமர் மோடி முழுவீச்சில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று இந்தியா முழுக்க தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டால், பொது மக்களுக்கு தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்பதால், தென்னிந்தியாவைச்சேர்ந்த சில முக்கிய நடிகர்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார் பிரதமர் மோடி. அந்த வகையில் மலையாள நடிகர் மோகன்லால்க்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், தற்போது பிரபல தெலுங்கு நடிகர்களான பிரபாஸ், மகேஷ்பாபு, மோகன்பாபு, டைரக்டர் ராஜமவுலி ஆகியோருக்கும் இந்த தூய்மை இந்தியா பிரச்சாரத்தில கலந்து கொள்ள அழைப்பு விடுத்து கடிதம் எழுதியிருக்கிறார் பிரதமர் மோடி. அதோடு, தூய்மையான இந்தியா என்பது ஏழைகளுக்கும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கும் நாம் செய்கிற புனித சேவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.