இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஸ்ரீ பாவல் மூவீஸ் சார்பில் சுசில் குமார் ஜெயின், ஆர்.உஷா தயாரிக்கும் படம் தெரு நாய்கள். தளபதி ரத்னம் இசை அமைக்கிறார். ஹரீஷ்-சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார்கள். புதுமுக ஜோடியுடன் அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி, பாவல், ஆறுபாலா, மது சூதனராவ், மைம்கோபி ஆகியோர் நடிக்கிறார்கள். புதுமுகம் ஹரி உத்ரா இயக்குகிறார். படம் வருகிற 22ந் தேதி வெளிவருகிறது. படத்தை பற்றி இயக்குனர் ஹரி உத்ரா கூறியதாவது:
நாய்கள் நன்றி உள்ளவை. அதேப்போல ஒரே தெருவைச் சேர்ந்த நண்பர்கள் 5 பேரும் நன்றி உள்ளவர்கள். ஆனால் அவர்களின் நன்றிக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. அந்த துரோகம் விவசாயம் சம்பந்தப்பட்டது. காவிரி டெல்டா விவசாயத்தை அழிக்கும் கொடூர கார்பரேட் கம்பெனிகள் வந்து இறங்குகிறது. அதனை ஒரு அமைச்சர் வழி நடத்துகிறார். இந்த பிரச்னையிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமானால் அமைச்சரை கடத்த வேண்டும் என்று திட்டம் போடுகிறார்கள். அப்புக்குட்டி தலைமையிலான டீம் அமைச்சரை கடத்துகிறது.
அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படம். படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று தனியாக யாரும் கிடையாது. எல்லோருமே கதை மாந்தர்களாக வருவார்கள். அப்புக்குட்டிக்கு இந்தப்படம் திருப்பு முனையாக இருக்கும். என்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா.