இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகை விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் மலையாள நடிகர் திலீப்புக்கு நான்காவது முறையாக ஜாமீன் மனு மறுக்கப்பட்டுள்ளது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. நடிகை விவகாரத்தில் கைது செய்யப்பட்டபோது முதன்முறையாக அங்கமாலி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு செய்து அது நிராகரிக்கப்பட்டது. அதன்பின் கேரள உயர்நீதிமன்றத்தால் இரண்டுமுறை திலீப்பின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் அங்கமாலி நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார் நடிகர் திலீப்..
அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. ஆனால் துரதிர்ஷடவசமாக இந்தமுறையும் அவரது ஜாமீன் மனு நிரகாரிக்கப்பட்டுள்ளது. திலீப் ஜாமீனில் வெளியே சென்றால் சாட்சிகளை கலைத்து, வழக்கை பலவீனமாக்க கூடும் என்கிற போலீஸ் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டே நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் 90 நாட்களுக்குள் இந்த வழக்கு குறித்த சார்ஜ் ஷீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.