ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய்சேதுபதி நடித்த கவண் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. அதையடுத்து தற்போது திருப்பதிசாமி குடும்பம் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர் எனது ரோல் மாடல் சமந்தா. அதனால் அவர் பாணியில் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கப் போகிறேன் என்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த கவண் படத்தில் விஜய் சேதுபதி டீமில் நானும் இருப்பேன். அது சிறிய வேடம் என்றாலும், நான் கவனிக்கப்பட்டேன். அதனால் தான் திருப்பதி சாமி குடும்பம் படத்தில் நாயகி வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் குடும்பபாங்கான வேடத்தில் நடித்திருக்கிறேன்.
இதையடுத்து கலையரசன் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்கயிருக்கிறேன். சினிமாவில் என்னை கவர்ந்த நடிகைகள் பலர் இருந்தபோதும் சமந்தா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் அவரை மாதிரி ஒரு நல்ல நடிகையாக சினிமாவில் ஒரு இடம் பிடிக்க ஆசைப்படுகிறேன்.
நான் விஜய்யின் தீவிரமான ரசிகை. எதிர்காலத்தில் அவருடனும் டூயட் பாட வேண்டும என்பது எனது ஆசையாக உள்ளது. அதற்கான சந்தர்ப்பம் கூடி வரும் என்று எதிர்பார்க்கிறேன். கவண் படத்தில் நடித்தபோது எனக்கு சினிமா குறித்து நிறைய அட்வைஸ் கொடுத்தவர் விஜய்சேதுபதி. இப்போதுவரை சினிமா குறித்து அவரிடம் நான் அட்வைஸ் பெற்று வருகிறேன். நான் பெரிய நடிகையாக வேண்டும் என்று அவரும் ஆசைப்படுகிறார்.
இந்த மாதிரி நல்லவர்களின் ஆசீர்வாதம் எனக்கு இருப்பதால் விரைவில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகி விடுவேன் என்று நம்புகிறேன் என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.