ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வெற்றிமாறனின் பொல்லாதவன் படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகர் கிஷோர். தற்போது இவர் போலீசாக நடித்துள்ள யார் இவன் படம் வெளியாகியிருப்பதை அடுத்து நாயகனாக நடித்துள்ள களத்தூர் கிராமம் படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் கிஷோர் அளித்துள்ள ஒரு பேட்டியில், சினிமாவில் நான் அதிகமாக வில்லனாகவே நடித்திருக்கிறேன். ஆனால் அப்படி நடித்து வந்த நேரத்தில் திடீரென்று என்னை பாசிட்டீவான வேடங்களில் நடிக்கவும் அழைத்தார்கள். அதையடுத்து முழுமையாக என்னை பாசிட்டிவான நடிகராக மாற்றிக்கொண்ட பிறகு முன்பு மாதிரி என்னால் நெகடீவ் ரோல்களில் சிங்கிள் டேக்கில் ஓகே பண்ண முடியாமல் போனது.
அதனால் சில காட்சிகளில் நடித்தது திருப்தி இல்லாமல் ரீடேக் வாங்கி நடித்துக்கொடுத்திருக்கிறேன். என்னைப்பொறுத்தவரை ஹீரோவோ, வில்லனோ எதுவாக இருந்தாலும் முதலில் எனக்கு அது நூறு சதவிகிதம் திருப்தி கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்கிறார் கிஷோர்.
அதையடுத்து ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து அவர் கூறுகையில், ரஜினி, கமல் இருவரும் நல்ல நடிகர்கள். சினிமா மூலம் மக்களை சென்றடைந்தவர்கள். இப்போது சினிமாவில் இருந்து கொண்டே மக்களுக்கு நன்மை செய்து வருகிறார்கள். எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறார்கள். இது வரவேற்க வேண்டிய விசயம்தான். கமல், அரசியலுக்கு ஏற்கனவே வந்து விட்டதாக சொல்லிவிட்டார். ரஜினியும் வர வேண்டும். அவர்கள் இருவருமே அரசியலுக்கு வந்து தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார் கிஷோர்.