அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் ஜெயப்பிரதா. கடைசியாக தசாவதாரம் படத்தில் நடித்தார். இந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெயப்பிரதா அரசியலில் குதித்து பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இப்போது அவர் அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.
6 வருடங்களுக்கு பிறகு தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள யாகம் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் புதுமுக ஹீரோ ஆகாஷ்குமாரின் தாயாக நடித்துள்ளார். மிஸ்தி என்ற புதுமுகம் ஹீரோயின். நாசர், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், நெப்போலியன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஷங்கர் உதவியாளர் என்.நரசிம்மா இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் ஜெயப்ரதா பேசியதாவது:
அரசியலுக்கு சென்று விட்டு மீண்டும் சினிமாவுக்கு திரும்பி இருக்கும் நானும், நெப்போலியனும் இதில் ஜோடியாக நடித்திருக்கிறோம். மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தபோது இயக்குனர் நரசிம்மா இந்த கதையை என்னிடம் கூறினார். அவர் கதை சொன்னவிதமும் பிடித்திருந்தது.
ஒரு தாய்க்கும், மகனுக்குமான அன்பை சொல்லும் படம். இன்னொரு புறம் பேண்டசி கதையாகவும் இருக்கும். தீய சக்திகளிடமிருந்து மகனை காக்க போராடும் காட்சியில் மிகவும் சிரமப்பட்டு நடித்தேன். எல்லா மொழிகளில் நடித்திருந்தாலும் தமிழ் மொழிகளில் நடிக்கும்போது தனி சந்தோஷம் இருக்கும். நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். என்றார்.