ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை விஜயசாந்தி சென்னையில் இருந்த தனது சொத்துக்களை இந்தர்சந்த் ஜெயின் என்பவருக்கு 5 கோடிக்கு விற்றுள்ளதாகவும், இந்தர்சந்த் ஜெயினிடம் 4 கோடியே 68 லட்சம் பெற்றுவிட்டு சொத்துக்களை வேறு ஒருவருக்கு விற்க முயற்சித்ததாகவும் இந்தர்சந்த் ஜெயின் சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கிற்கு சரியான ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து இந்தர்சந்த் ஜெயின் சென்னை எழும்பபூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜயசாந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்தர்சந்த் ஜெயினும் பதில்மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வழக்கறிஞர்களும் கோர்ட்டில் இந்த பிரச்சினையை சமாதானமாக பேசி முடிக்க விரும்புவதாக தெவித்தனர். அதைத் தொடர்ந்து இருதரப்பும் வருகிற 18ந் தேதி (நாளை) கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், சமரச தீர்வு மையத்தில் பேசித் தீர்த்துக் கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.