ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அஜீத்தை வைத்து காதல் மன்னன், அமர்களம், அட்டகாசம், அசல் படங்களை இயக்கியவர் சரண். இடையில் ஜெமினி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போன் வெற்றிப் படங்களையும் கொடுத்தார். இதய திருடன், வட்டாரம், மோதி விளையாடு, அசல் படங்களின் தோல்வியால் அடுத்த வாய்ப்பின்றி இருந்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு ஆயிரத்தில் இருவர் என்ற படத்தை தானே தயாரித்து இயக்கினார்.
இதில் வினய்யுடன் சமுத்ரிகா, ஸ்வாஸ்திகா என்ற இரு புதுமுகங்கள் நடித்தனர். பரத்வாஜ் இசை அமைத்திருந்தார், கிருஷ்ணராமன் ஒளிப்பதிவு செய்திருந்தார். மிகுந்த பொருளாதார சிக்கல்களுக்கு இடையில் இந்தப் படத்தை சிரமப்பட்டு முடித்தார் சரண். படம் முடிந்தும் அதனை வெளியிட முடியாமல் தவித்து வந்தார்.
இந்தப் படத்தின் நாயகன் வினய் வில்லனாக நடித்த துப்பறிவாளன் படம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாலும், அதில் வினய்யின் நடிப்பு பேசப்படுவதாலும் இந்த சூழ்நிலையில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார் சரண். வருகிற 22ந் தேதி படம் வெளிவருவதாக அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே இரண்டு முறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.